Powered By Blogger

Sunday, 18 July 2021


இருளுக்குப் பார்வையைப்
பழகக் கொடுத்த பிறகு
உன் அன்பின் துளிச் சிதறல் கூடக்
கண்கள் கூசுகிறது..

இரண்டாவது முறையாக
மூன்றாவது முறையாக
நாங்காவது முறையாக என்று
இருளுக்குப் பழகுதல் எளிதானதே..

இருப்பினும்,
இடையிடையேயான ஒளிச்சுவடுகள்
தேவையில்லை எனக்கு...
தொலைவாகியே போய்விடு...

No comments:

Post a Comment