Powered By Blogger

Tuesday, 3 November 2020


பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும்
வயிற்றுக்குள் பிறக்கின்றன
சிறகசைத்துப் படபடக்கும்போது
குறுகுறுப்பை உணரலாம்

மெல்ல மேலேறி
வாய்மொழியில் வெளிப்பட்டுவிடின்
பூக்களையோ கொலைக்கரங்களையோ
சென்றடையலாம்

இவற்றுள் பெரும்பாகம்
பூக்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல்
தனித்திருந்தே சாகின்றன
அவை கொலைக்கரங்களில்
அகப்பட்டு விடுவதையும் விரும்புவதில்லை..

No comments:

Post a Comment