சிறகசைத்துப் படபடக்கும்போது
குறுகுறுப்பை உணரலாம்
மெல்ல மேலேறி
வாய்மொழியில் வெளிப்பட்டுவிடின்
பூக்களையோ கொலைக்கரங்களையோ
சென்றடையலாம்
இவற்றுள் பெரும்பாகம்
பூக்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல்
தனித்திருந்தே சாகின்றன
அவை கொலைக்கரங்களில்
அகப்பட்டு விடுவதையும் விரும்புவதில்லை..
No comments:
Post a Comment