Powered By Blogger

Tuesday, 3 November 2020

இருள் குளிர்வது
தலையணைகளை நனைத்தும் தீராத
கண்ணீரின் மிச்சமென்கிறேன் நான்..
ஏதேதோ அறிவியல் காரணங்களை
அடுக்குகிறாய் நீ..

பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும்
வயிற்றுக்குள் பிறக்கின்றன
சிறகசைத்துப் படபடக்கும்போது
குறுகுறுப்பை உணரலாம்

மெல்ல மேலேறி
வாய்மொழியில் வெளிப்பட்டுவிடின்
பூக்களையோ கொலைக்கரங்களையோ
சென்றடையலாம்

இவற்றுள் பெரும்பாகம்
பூக்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல்
தனித்திருந்தே சாகின்றன
அவை கொலைக்கரங்களில்
அகப்பட்டு விடுவதையும் விரும்புவதில்லை..