Lamb of Jesus, Father's girl, Chubby child, Researcher, Bookworm, Somewhat poet, Shutterbug, Bathroom singer...
Friday, 10 January 2020
Labels:
கவிதை

Labels:
கவிதை

Monday, 6 January 2020

Saturday, 4 January 2020
அன்புள்ள அம்மாவுக்கு...
நான் தூங்கிவிட்டதாக நினைத்து அப்பாவிடம், "அழகான பொண்ணுங்களவே புடிக்கலைனு பையன் வீட்டுல சொல்லிட்டு போறாங்க... நாம இப்படி அசிங்கமா பெத்து வெச்சிருக்கோம் நம்மல எப்படியெல்லாம் சொல்லுவாங்களோ"னு சொன்னாயே அம்மா... யார் வேண்டுமானாலும் இந்த உலகத்தில் யாரை வேண்டுமானாலும் வெறுக்கலாம், கேலி பேசலாம். இந்த 23 ஆண்டுகளில் விதம்விதமான கேலிகளையும் வெறுப்புகளையும் பார்த்தாகி விட்டது அம்மா... எல்லாமே பழகிப் போய்விட்டது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொல்லுவார்களே, நீயே என்னை அசிங்கமென்று சொல்லிவிட்டாயே அம்மா. நான் குண்டாகப் பிறந்தது என்னுடைய தவறா?. ஒல்லியாகவும் வெள்ளையாகவும் இருப்பது தான் அழகு என்று எல்லா ஆண்களும் நினைப்பது போல, நீயும் நினைக்கிறாயா அம்மா.. பூ இருந்தால் போதாது, வாசமும் வேண்டுமென்று வசனம் பேசுகிறாயே, உன் வேதனையும் பயமும் எனக்குப் புரிகிறது.. ஆனாலும் நீ பேசிய வார்த்தைகள் எனக்கு எத்தகைய வலியைத் தருமென்று உனக்குப் புரியவில்லையா அம்மா..
Labels:
கடிதம்

Subscribe to:
Posts (Atom)