Powered By Blogger

Friday, 14 June 2019

இளையராஜா 


இடம் பொருள் பாராது
எப்போதும் கைகள் ஆடுகின்றன
அவ்வப்போது கால்களும்
அரிதாகத் தலையும்

உதடுகள் கூட வரிகளாகவும்
அவ்வப்போது வளைந்து கொடுத்துப்
புன்னகையாகவும் நெளிகிறது
கொஞ்சம் தள்ளியிருந்து கவனிப்பவர்களுக்குப்
பைத்தியமாக்கிக் காண்பிக்கும் வல்ல
இசைத் துணுக்குகளைத் தூவும் நீ
என்ன விதமான பரம்பொருள் ராஜா...

No comments:

Post a Comment